Menu Close

கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அன்னதானம்

கலசபாக்கத்தில் நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலசபாக்கம் தொகுதி கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.