Menu Close

கலசப்பாக்கத்தில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் சட்டசபையில் எம்எல்ஏ வலியுறுத்தல்

கலசப்பாக்கம் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களில்  தொழிற்பேட்டை அமைத்திட வேண்டும் என சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ  பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசியதாவது கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட   ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை இல்லாத காரணத்தினால் அண்டை மாநிலங்களுக்கு சமூக விரோத செயல்களுக்கு பணம் கொடுத்து அழைத்து செல்லும் அவலநிலை உள்ளது.

இதை தடுத்து ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க முன்வர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.