Menu Close

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ₹1 கோடி ஒதுக்கீடு கலசபாக்கம் எம்எல்ஏ தகவல்

கலசபாக்கம் எம்எல்ஏ  வி. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்க மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். விடுமுறை என்பதால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். வெளியே சென்று உள்ளே வரும்போது, கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அரசு வழங்கும்  நிவாரண  தொகை ₹1,000 மற்றும் உணவு பொருட்கள், அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்ம  வீடு தேடி வரும். எனவே, பொதுமக்கள் வெளியே செல்லாமல் கொரோனா   வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேபோல், தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம் கிராமப்புறங்களில் பொது மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.