Menu Close

கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வணக்கம்.

கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

மக்களே மிக கவனம்…
அரசாங்கத்தின் வழிகாட்டுதலை கவனத்துடன் பின்பற்றுங்கள்…

ஆய்வுக்கு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.

ஒவ்வொருவரும் நம் மக்களின் நலனுக்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்களும், மருத்துவத் துறை ஊழியர்களும் உயிரை பணயமாக வைத்து நம் மக்களின் உயிர்காக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் ஒத்துழைப்பு அவர்களின் பணியை எளிதாக்கும்.

கவனக்குறைவு, ஒத்துழையாமை, வழிகாட்டுதலை பின்பற்றாமை அரசு ஊழியர்களின் பணியையும் மருத்துவர்களின் சிரமத்தையும் பல மடங்கு கூட்டிவிடும்.

எனவே அன்பிற்குரிய மக்களே சிரம் தாழ்ந்து, உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்…

சமூக விலகலை கடைபிடியுங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…
தூய்மையை கடைபிடியுங்கள்…
அவசர, அத்தியாவசியத்திற்கு மட்டும் வெளியே வாருங்கள்…
வெளியே வரும்போது முகக்கவசம் அணியுங்கள்…

அச்சம் வேண்டாம், அஜாக்கிரதையும் வேண்டாம் !
நம் உயிர்காக்க உதவுபவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது நம் கடமையல்லவா !

நம் ஒற்றுமையின் பலம் அறிவோம்…
படிப்படியாக கொரோனாவை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள் !

என்றும் உங்கள் நலன் நாடும்

உங்கள் சட்ட மன்ற உறுப்பினர்.
வி. பன்னீர் செல்வம்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.