Menu Close

செண்பகத்தோப்பு அணை போளூர் தொகுதி எனதவறான பதிவு – ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஷ்ணு பிரசாத்திற்க்கு கண்டனம்

செண்பகத்தோப்பு அணை என்பது கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது இதனை சீர்படுத்தும் பணியை நடத்துவதற்காக நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய முயற்சியோடு முதல்வரின் ஒப்புதலுடன் ஏற்கனவே திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு டெண்டர் கோரும் நிலையில் உள்ளது.

உண்மை இப்படி ஒரு புறம் இருக்க இதனை அறியாது ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஷ்ணு பிரசாத் அவர்கள் பாராளுமன்றத்திலே செண்பகத்தோப்பு என்பது போளூர் தொகுதியை சார்ந்ததாகவும் ஆரணி பாராளுமன்ற தொகுதி சார்ந்ததாகவும் ஒரு தவறான பதிவை வெளியிட்டுள்ளார். பிரச்சினைக்குரிய அணை கோரிக்கை கூறிய அணை எந்த இடத்தில் உள்ளது எந்த தொகுதியின் கீழ் வருகிறது என்பது கூட தெரியாமல் ஒரு தவறான தகவலை பாராளுமன்றத்திலே பதிவு செய்துள்ளார் இதை பத்திரிகையாளர் சந்திப்பில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டு அவருடைய வருத்தத்தையும் கண்டனத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் உடைய கவனக்குறைவான பேச்சையும் கண்டித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.