Menu Close

மகளிர் கலை கல்லூரி துவங்கப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கண புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு. கருணாகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எல். என். துறை ஆகியோர் கலந்துகொண்டனர். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் விரைவில் கலசப்பாக்கம் தொகுதியில் மகளிர் அரசு கலை கல்லூரி துவங்கப்படும் என்றார். மேலும் இப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தருவதாகவும் கூறினார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.