Menu Close

காலை வணக்கம்

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தமிழ்நாட்டு அரசியலில்
வரலாற்றுத் திருப்புமுனைக்கு
வித்திட்ட அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
மக்கள் திலகம்,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்டு 49 ஆண்டுகள்…

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

நமது கழகத்தை,
கழகத்தின் உயிர் மூச்சான தொண்டர்களை திறம்பட ஒன்றிணைத்து…

அனைத்து சவால்களையும் அம்மாவின் ஆசியோடு வென்று…

அம்மாவின் ஆட்சியை
தமிழக மக்களின்
வாழ்விற்காகவும்
வளர்ச்சிக்காகவும்
தந்து கொண்டிருக்கும்
கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களையும்…

கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வழி நடந்து பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு மக்கள் சேவையில் பங்காறுவோம்…

இந்த வரலாற்று நிகழ்வை தமிழக மக்களுடன் கொண்டாடி, நன்றி பாராட்டி நாளும் நலம் புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்.

என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கான… என்னுடைய கனவுகள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என்னுடைய வார்த்தைகள்
கவிதைகளும் அல்ல…
கற்பனைகளும் அல்ல…

உவமையும் அல்ல…
உருவகமும் அல்ல…

என் தொகுதி மக்களின்
வளமான வாழ்விற்கான…
என்னுடைய கனவுகள்…

கனவுகள் மெய்ப்பட
நாளும் சிந்தித்து
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

உங்களின்
அன்பிற்கும்
ஆதரவிற்கும்
மிக்க நன்றி…

அதுவே என்னை உத்வேகத்துடன் கடமையாற்ற வைக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

விளைந்த பொருட்களை விற்கும்போது விவசாயிகளும் வியாபாரிகள் போல் சிந்திக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் விவசாயிகள்
வியாபாரம் பயிலட்டும்…

விளையும் முன் சேவகனாக…

விதைக்கும் போது
படைக்கும் கடவுளாக…

காக்கும்போது
தாயாக இருக்கட்டும்…

விளைந்த பொருட்களை
விற்கும்போது,
விவசாயிகளும்
வியாபாரிகள் போல்
சிந்திக்கட்டும்…

விளை நிலங்கள்
விலை நிலங்களாக
மாறாமல் காக்கப்படட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

என் இலக்கெல்லாம்… எம் மக்களின்… வளம்… அமைதி… ஆற்றல்… முன்னேற்றம்… ஆரோக்யம்… பொருளாதாரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !
வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…
என் இலக்கெல்லாம்…
எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…
சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

ஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி
என்னவாக இருந்தாலும்…

ஆற்றும் கடமை
எதுவாக இருந்தாலும்…

இந்த சமூகத்தின் பால்
அக்கறையோடும்…
சமூக மக்களின் மீது
அன்போடும் செயலாற்றி
பாருங்கள்…

உங்கள் செயலுக்கு ஒரு புது
உத்வேகம் பிறக்கும்…
செயலில் புதிய எழுச்சி தெரியும்…

உத்வேகமும் எழுச்சியும் தொடர
ஏற்றுக்கொண்ட பணியில் உச்சம்
தொட்டு சிறப்பு அடைவீர்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

யாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

இறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

மேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…

தொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…

துணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…

நலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

விவசாயிகள் நலனே சமூகத்தின் நலன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விவசாயிகள் நலனே
சமூகத்தின் நலன்…

ஒட்டுமொத்த சமூகமும்
விவசாயிகள் அனைவருக்கும்
நன்றியுடன் நலம் பெற செய்வோம்…

என் இளைஞர் சமூகமே…
ஆன்றோர்களே…
சான்றோர்களே…
தொழில் துறை வல்லுனர்களே…
வர்த்தக நிபுணர்களே…

உங்களின் தொழிலும்…
உங்களின் வியாபார வியூகமும்…
திட்டங்களும்…
செயல்பாடுகளும்…
சிந்தனைகளும்…
கண்டுபிடிப்புகளும்…

நம் விவசாயிகள்
நலம் பெற…
வளம் பெற…
ஏதுவாக அமையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

நோக்கம்,
அது சரியாக
இருக்கும் போது
தெய்வமே
நம் முன்
நம் உள்
நம் உடன் இருந்து
வழிநடத்தும்…

என்றும் அம்மாவின் ஆ(ட்)சி…

அடுத்த சந்ததிக்கு
உறுதியாக சொல்லுங்கள்
ஒளிமயமான ஒரு எதிர்காலம்
உருவாகிக் கொண்டிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக அமைய…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் வீட்டுப்
பிள்ளைகளின் எதிர்காலம்
வளமாக அமைய…

உங்கள் வீட்டுப் பிள்ளையாக…
உங்களில் ஒருவனாக…

கலசப்பாக்கம் தொகுதி
அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினராக….

தினம் தினம்…
இரவு பகலாக…
மக்களின்
வாழ்வைப் பற்றி சிந்தித்து…
மக்களின் வளத்தைப்
பற்றி சிந்தித்து…
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

உங்களிடம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம்…

உங்கள் பிள்ளைகளின்
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வளமான நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க…

இந்த சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் தலைவர்களாக நம் தொகுதி பிள்ளைகள் உருவாகட்டும்.

அதற்கேற்ற தலைமை பண்புகளையும், தன்னம்பிக்கைகளையும் ஊட்டி நம் இளைஞர்களை தயார்படுத்துவோம்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்.

உண்மைக்கு தலைவணங்கி நன்றி பாராட்டும் அறிவார்ந்த மக்கள் நம் தமிழக மக்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வதந்திகளுக்கும்…
விளம்பர வித்தைகளுக்கும்
விலைபோகும் கூட்டமல்ல
நம் தமிழர் கூட்டம்…

உண்மைக்கு தலைவணங்கி
நன்றி பாராட்டும்
அறிவார்ந்த மக்கள்
நம் தமிழக மக்கள்…

உண்மை அறிந்தோர்…
உண்மை புரிந்தோர்…
தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு
உண்மையை எடுத்துரையுங்கள்…

உண்மையானவர்கள்
உயரவேண்டும்…
உண்மையானவர்கள் உண்மைக்கு
பலம் சேர்க்க வேண்டும்…

வளர்ச்சியும் வெற்றியும்
உண்மையால் வழி நடத்தப்படட்டும்…

உண்மையின் பலம்
உண்மையானவர்களை மட்டுமே
உயர்த்தி பிடிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உழைப்பும், முயற்சியும் ஒன்றிலேயே தொடரட்டும்… வெற்றி நமக்கே உரித்தாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இருவேறு பாதையில்
ஒரே நேரத்தில்
நீங்கள் பயணிக்க முடியாது…

இரு இலக்கை
ஒரே நேரத்தில் எட்ட முயல்பவர்
இரு இலக்கையும் தவற விடலாம்…

குறிக்கோள் ஒன்றாகட்டும்…
கவனம் அதில் குவியட்டும்…

உழைப்பும், முயற்சியும்
ஒன்றிலேயே தொடரட்டும்…
வெற்றி நமக்கே உரித்தாகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கடமைகளை கடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமைகளை
கடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்
மகிழ்வுடனே நிறைவேற்றுங்கள்…

கடமைகள்
மகிழ்வுடன் மேற்கொள்ளபடாமல்
கட்டாயமாக பார்க்கப்பட்டால்
வாழ்வில் மகிழ்வு ஏது ? உயர்வு ஏது !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்

அறிவு இருந்தும், ஆற்றல் இல்லையெனில் செயல்கள் நிகழாது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு செயலை பற்றிய
அறிவு என்பது வேறு…
அந்த செயலை செய்யக் கூடிய
ஆற்றல் என்பது வேறு…

அறிவு இருந்தும்,
ஆற்றல் இல்லையெனில்
செயல்கள் நிகழாது…

அறிவு மட்டுமே
செயலை நிகழ்த்திக் காட்டாது…

அறிவும்…
ஆற்றலும்…
எல்லாம் வல்ல
இறைவனின் அருளும்…
நம் அம்மாவின் ஆ(ட்)சியும்…
எதையும்…
எந்தச் செயலையும்…
நடத்திக் காட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

இன்று அண்ணல் காந்தியடிகளின் 151 வது பிறந்த நாள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று
அண்ணல் காந்தியடிகளின்
151 வது பிறந்த நாள்…

ரூபாய் நோட்டுகளில்
மட்டுமல்லாமல்…
நம்முடைய ஒவ்வொரு
சிந்தனையிலும்…
செயல்களிலும்…
அண்ணல் காந்தியடிகள்
வாழ்ந்து காட்டிய வழி நடந்து…
ஊரும் உலகமும் சிறக்க
வாழ்ந்து காட்டுவோம்…

செயல்படும்
தீயோர்களைவிட,
சமூகத்திற்காக…
செயல்படாத…
ஈடுபடாத…
கண்டும் காணாத…
நல்லோர்களாலேயே
இந்த உலகம்
அதிக பாதிப்புக்கு
உள்ளாகிறது !

முழு ஈடுபாட்டுடன்
நம் கடமை ஆற்றுவோம்…
புது உலகைப் படைக்கும்
மனநிறைவு கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

ஆரம்பமும் முடிவும் இல்லா தொடர் பயணத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஆரம்பமும்
முடிவும்
இல்லா
தொடர் பயணத்தில்…
முந்தி எது ?
பிந்தி எது ?
பாதையில் இருத்தலே வாழ்வு… பயணித்து இருத்தலே வெற்றி…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Powered by J B Soft System, Chennai.