Menu Close

காலை வணக்கம்

வாழ்வு வேறு… வாழ்க்கை வேறு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில்,
சவால்களை சந்திக்கும் போது…
கலங்க வேண்டாம்…
நொறுங்க வேண்டாம்…

மனத்திடமும்
விரி திறனும்
மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…

வாழ்வு வேறு…
வாழ்க்கை வேறு…

வாழ்வு அமைவது,
வாழ்க்கை வாழ்வது…

வாழ்ந்து காட்டுவோம்…

அன்பிற்குரிய என் மக்களே…
நற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற
எப்பொழுதும் துணை நிற்பேன் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒரு நாள்
விடிவதும் முடிவதும்
அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

காரணம் சொல்லி
காலம் தாழ்த்தி
காரியங்களை தள்ளி போடுவதும்…

வீறு கொண்டு…
வாய்ப்புகள் கண்டு…
நல்லோர் துணை கொண்டு…
நலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…

நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…

சிரியன தவிர்த்து
சிறப்பான வாய்ப்பு கொளல்…
சிறப்பிலும், சிறப்பே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நம் உள்ளங்களில் வாழும் கடவுள் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நம் உள்ளங்களில்
வாழும் கடவுள் அம்மா…
அம்மாவின் நினைவு தினத்தை கடந்தும் அலைஅலையாய் அம்மாவின் நினைவுகள்…
எங்கெங்கு காணினும் அம்மாவின் நினைவுகள்…
நம் தொகுதி தாய்மார்கள் ஒவ்வொருவரிடமும்…
அம்மாவை காண்கிறேன்…
அம்மாவின் அன்பை காண்கிறேன்…
அம்மாவின் துணிவை காண்கிறேன்…
அம்மாவின் திறமையை காண்கிறேன்…
அம்மாவின் பண்பை காண்கிறேன்…
அம்மாவின் ஆற்றலை காண்கிறேன்…
அம்மாவின் அறிவைக் காண்கிறேன்…
நம் அம்மா நம் தாய்மார்களாக நம்முடனேயே இருக்கிறார்…
வளர்க அம்மாவின் புகழ்…
வாழ்வாங்கு வாழட்டும்
என் மக்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…

பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !

விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…

வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…

நம் இதய தெய்வத்திற்கான அஞ்சலியுடன் என் காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

தொகுதி மக்களின் நலனிற்காக அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதிர்ப்பும் வெறுப்பும்
என்றும் என் மூலதனம் அல்ல…

மக்கள் வாழ்வாங்கு வாழ…
அன்பும், நட்பும்
என் உயிர் மூச்சாக
கொண்டு செயல்படுகிறேன்…

தொகுதி மக்களின் நலனிற்காக
அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…

என்னைப் போற்றுவோரை மட்டுமல்ல
எனை தூற்றுவோர் மீதும்
அன்பு செலுத்தி
அரவணைத்தே செல்கிறேன்…

ஏனெனில் நானறிவேன்
அவர்களுக்கும் நான்தான்
சட்டமன்ற உறுப்பினர் என்று…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நமது பொறுப்புகள் அறிவோம்… நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நம்முடைய உடனடித் தேவை…
சிந்தனை சீர்திருத்தம்…

நமது பொறுப்புகள் அறிவோம்…
நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

தற்போதைய பொறுப்புகள் அறிந்து,
சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து,
செவ்வனே கடமைகள் புரிவோருக்கு…
அடுத்தடுத்த பொறுப்புகள்
இயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நேற்றைய தினம்
மிகுந்த மனநிறைவு
கொடுத்த தினம்…
நாள் முழுவதும்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன் சந்திப்பு…
காலையில்
மேல் வில்வராயநல்லூர்
அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன்,
நம் மாவட்டத்திற்கு
புதிதாக வந்துள்ள
மாவட்ட ஆட்சியர்
உடன் சந்திப்பு…
மாலையில்
அனந்தபுரத்தில்
நூற்றுக்கணக்கான
ஆசிரியர்களுடன்…
ஒரு சமூகத்தில் மக்கள்
ஆசிரியர்களை
எந்தளவுக்கு
மதிக்கின்றார்களோ…
எப்படி போற்றி
பாதுகாக்கின்றார்களோ
அந்த அளவிற்கு
அந்த சமூகத்தின்
வளர்ச்சி இருக்கும்…
அன்பிற்குரிய மக்களே…
நீங்களும்
உங்கள் பிள்ளைகளும்
நம்மைப் படைத்த
இறைவனுக்கு நிகராக
ஆசிரியர் பெருமக்களை
ஒவ்வொரு நாளும்
போற்றி வணங்குவோம்…
ஆசிரியர்களே
நல்ல ஒரு சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…
நல்லதொரு சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும்
ஆசிரியர்களே…
ஆசிரியர்கள் மதிக்கப்படும்
சமூகம் நிச்சயம்
வளர்ச்சியை நோக்கி
நகர்ந்துகொண்டே இருக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கடவுள் தேடும் மனிதர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுளைத் தேடும்
மனிதர்கள் பலர்…

கடவுள் தேடும்
மனிதர்கள் சிலர்…

நலம் நாடி…
நலம் தேடி…
சமூகத்திற்கு
நலம் பயக்கும்
நல்லவர்களையே
கடவுள் தேடிக் கொண்டிருக்கிறார்…

உடனடியாக தயாராகவும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

இந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சற்றே
கவனித்துப்
பார்த்தால் தெரிகிறது
கடவுளுக்கும் இந்த
உலகத்திற்கும்
மனிதர்களாகிய நாமே
இணைப்பு பாலம் ஆவோம்…

இந்த உலகத்திற்கான
அனைத்து நன்மைகளும்
நம் மூலமாகவே
நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது…

ஓ… கடவுளின்
கருவியா நாம் !

கருவியின் தர்மம்,
கொண்டவன் பெருமையும்
பெருமிதமும் கொள்ள திறம்பட
செயல் படுதலே…

கருவி கொண்டவனை
வித்தகன் ஆக்குகிறது…

கடவுளின் கருவியாக
செயல்படுவோம் நாம்…

இந்த உலகத்திற்கான
கடவுளின் எண்ணங்களும்
திட்டங்களும் நம் மூலமாக
இனிதே நிறைவேறட்டும்…

நம் மக்கள்
வாழ்வாங்கு
வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நிறைந்திருங்கள்… மகிழ்ந்திருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எதை மனதில்
கொண்டு காண்கிறோமோ, அதுவே நமக்கு தெரிகிறது…

நிறை கொண்ட மனது
நிறை கண்டு மகிழ்கிறது…

குறை கொண்ட மனது
குறை தேடி அலைகிறது…

மகிழ்வுற்ற மனது உலகையே உள்ளடக்கி ஆளுகிறது…

நிறைந்திருங்கள்…
மகிழ்ந்திருங்கள்…

வாழட்டும் இந்த உலகம் உங்களால் கூடுதல் மகிழ்ச்சியோடு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

இந்த உலகில் தனித்தது என்று எதுவுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகில்
தனித்தது என்று
எதுவுமில்லை…

எதுவும் தனித்து
இயங்கவில்லை…

ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும் தொடர்புடையவையே…

கூர்ந்து கவனியுங்கள்
தொடர்பை கண்டறியுங்கள்…

நம் ஒவ்வொருவருடைய
எண்ணங்கள்,
சொற்கள்,
செயல்பாடுகள்
இந்த பிரபஞ்சத்தில்
ஏதோ ஒரு வகையில்
தாக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டேதான் இருக்கிறது…

இந்த பிரபஞ்ச
தத்துவம் புரிந்து,
நம் சக மனிதர்களின்
மனங்கள் மகிழ
இயற்கை புன்னகை பூக்க
இயல்பாய் ஒரு
இனிதான சமூகத்தை
கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

புயல் எச்சரிக்கை விடுத்த கணத்திலிருந்து ஓய்வு உறக்கமின்றி தொடர் ஆலோசனை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புயல் கரையை கடந்தது…
ஏரி குளங்கள் நிரம்பின…
நமது செண்பகத்தோப்பு
அணை நிரம்பியது…
நமது மனதும்
மகிழ்ச்சியால் நிறைந்தது…

புயல் எச்சரிக்கை
விடுத்த கணத்திலிருந்து
ஓய்வு உறக்கமின்றி
தொடர் ஆலோசனை…

அத்துணை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்தல்…
நிவாரண முகாம்கள் அமைத்தல்…
அணையை பார்வையிட்டு
ஆய்வு செய்தல்…
என்று அயராது உழைத்ததன் பலன் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது…

பேரிடர் காலத்தில் மக்களின் அனைத்து தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது…

துணைநின்ற அத்தனை அரசு அலுவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…

புயல் கரையை கடந்தது…
ஏரி குளங்கள் நிரம்பின…
நமது செண்பகத்தோப்பு
அணை நிரம்பியது…
நமது மனதும்
மகிழ்ச்சியால் நிறைந்தது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உழவும் தொழிலும் செழித்து ஓங்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை…

நம்மில் உள்ள நல்லார்
ஒவ்வொருவருக்காகவும்
பெய்யட்டும் மழை…

உழவும் தொழிலும்
செழித்து ஓங்கட்டும்…

எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

“நிவர் புயல்” : சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆற்றல்மிகு ஆளுமையான மாண்புமிகு நமது முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சீரிய திட்டமிடல் படி நமது அம்மாவின் அரசு நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது…

நம் தொகுதியிலும் இன்று அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

நம் மக்களின் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டு துணை நிற்கும் அத்துணை அரசு அலுவலர்களையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்…

மக்கள் அனைவரும் தக்க கவனத்துடன் இருந்து உங்களுக்காக உழைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறேன்…

எந்தவித பெரிய சேதமும் இன்றி நிவர் புயலும் கடந்து போகும் என்று நம்புவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வரும்முன் காப்போம்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

புதியதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது.

அம்மாவின் அரசு மாவட்ட ஆட்சி மற்றும் உள்ளாட்சி மூலமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. நிகழ்வுகளை மிக ஜாக்கிரதையாக கூர்ந்து கவனித்து வருகிறோம்.

நம் கலசபாக்கம் தொகுதியில் உங்கள் ஒவ்வொருவரின் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியம். அதுவே என் நோக்கம்…

உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், நம் தொண்டர்களும் மக்கள் நலன் காக்கும் பணியில் அடுத்த 48 மணி நேரம் கவனத்துடன் ஈடுபடுவார்கள். அது சமயம் உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியம்.

அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு விஷயத்தையும் நம்பவோ அதை பரப்பவோ வேண்டாம் என்று உங்கள் நலனில் அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Powered by J B Soft System, Chennai.