Menu Close

காலை வணக்கம்

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள்.
இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற
நேர்மறையான எண்ணங்களோடும்‌,
தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..
கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நம்பிக்கை வானத்தையும் வசப்படுத்தும்.
நமக்கு தேவையான அனைத்தையும் நம்மை அடைய வைக்கும்.
வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது தான்.
காரணமின்றி மகிழ்ச்சியாய் இருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்கு தேவையான
நிறைவான ஆரோக்கியம்
நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
அனைத்தும் பெற்று
உங்கள் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியால் நிறைந்து
சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்.

சிலரிடம் கேட்க முடியாத கேள்விகளும், பலரிடம் சொல்ல முடியாத பதில்களும் பல உள்ளங்களை
உருத்திக்கொண்டுதான் இருக்கின்றன அவரவர் வாழ்க்கையில்.

பிறர் மீதான வெறுப்பு அதிகரிக்கும்போது உங்களது
நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன உங்களையறியாமலேயே.

உங்களை புரிந்துகொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதை விட மௌனமாய் கடந்து போவது மேல்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும்
வேண்டாம்.

மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வைத்து, மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.
இறைவனை நினைத்து வேண்டும்போது உங்கள் மனதை நிதானமாக யோசித்து செயல்பட வைக்கும். அதுவே உங்களை சுலபமாக நல்வழிக்கு கொண்டு செல்லும்.
மனம் ஒருவருக்கு அடங்குமே ஆனால் அவரால் முடியாது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. அத்தகைய மனதை அடக்கி ஆளும் வித்தையை இறைவனிடம் வேண்டி செய்யும் பிரார்த்தனையால் அடையலாம்.

உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.

சிந்தனையில் சில வரிகள்…..
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது !
கண் திறக்காத, சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத ஓட்டை உடைத்து
கொண்டு வெளியே வரும் போது,
வழிகள் நிறைந்த, இந்த உலகத்தில், விழியிருந்தும் வழி தெரியாமல், ஏன் ? விழிக்கிறீர்கள் ?
எதைக் கண்டும் அஞ்சாமல், இருக்கின்ற நிலையில், இருப்பதை வைத்து துணிச்சலோடு செயலாற்றுங்கள்.
உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்.
ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல
முடியாது…

பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்பவர்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை.
இரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச்சோடி போகலாம், ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான் ஆகவேண்டும்.
நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். தாமதமாக கிடைக்கும் யாவும் தரமானதாக தான் இருக்கும்.
பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.
சில நேரங்களில், சில இடங்களில் பார்வையாளராக இருங்கள் அதுவே
சிறந்தது.

அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..

முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்….
அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..
செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள்.
நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அத்தகைய குணங்களை கொண்டவருடன் சேர்ந்து இருங்கள் வெற்றி நிச்சயம்.

வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கும் பொழுது…
பழைய தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்;
நீங்கள் தேடும் அனைத்தும் உங்களுக்குள் தான் இருக்கிறது…
நீங்கள் நாடும் விதத்தில் அது செயல்படும்;
காற்றை அழைக்க முடியாது…
ஆனால் கதவுகளை திறந்து வைக்கலாம்;
வாய்ப்புகளும், வெற்றிகளும் அப்படித்தான்…
முயற்சித்துக்கொண்டே இருங்கள்…
வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.

பிர்லாவை போல சம்பாதித்தேன். ஊதாரியை போல செலழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனை போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
– கவிஞர் கண்ணதாசன்.
சோற்றைவிட, உப்பிற்கே மரியாதை அதிகம். ஆனாலும் விரலளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஆடம்பரமும் அப்படித்தான்.
நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காகத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே சாதிக்க முடியாது உன்னால்..

யாரையும் எதிர்பார்த்து
வாழ்ந்து விடாதே..
எழுந்து கொள்ளக் கூட
துணை தேவைபடும்
பின்னால்..
யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதே
சாதிக்க முடியாது
உன்னால்..
எதிர் கொண்டு
வாழ்ந்து பார்
தடைகள் விலகி
விடும் தன்னால்..
நன்னாள் வரும்
என்று
இன்நாளை நீ
இழந்தால்
நிழல் கூட
துணை வராது
உன் பின்னால்..

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க …

இன்றைய சில சிந்தனைகள்!!!!*
நம் ஆசைகளின்
ஓட்டங்களுக்கு எல்லாம்….
நிம்மதி என்ற
விலைமதிக்க முடியாத_
ஒரு பொக்கிஷத்தை_
அடகு வைத்துக் கொண்டு_ இருக்கின்றோம் என்பது….
கவனிக்கப் படாத
உண்மை….
முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்று வருந்துவதை விட …
அடுத்த வெற்றிக்கான முயற்சியை‌ முன்னதாக கொடுத்து விட்டோம் என்று நினைப்பது வெற்றிக்கான முதற்படி………!!
மற்றவருக்கு நம்பிக்கையாக இருங்கள் …
ஆனால் …
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு
நம்பிக்கையா இருக்காதீங்க …
எப்போது உங்களின்
விருப்பமும் , வேலையும்
ஒன்றாக ஆகிறதோ,
அப்போது, நீங்கள்
சாதிக்க துவங்குவீர்கள்…
இன்பங்களைப் பெற முயல்வதை விட,
லட்சியங்களைப் பெருக்க முயல்வதே மேல்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் …
மனிதனுக்கு மதி என்பது தேவையே இல்லையே …

பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்..

பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!

ஒருநாள் திரும்பி உங்களை தேடி வருவார்கள் ..

கோபத்தில் உங்களை விட்டு
சென்றவர்கள்
கண்டிப்பாக
ஒருநாள் திரும்பி உங்களை தேடி
வருவார்கள் …
ஆனால் சிரித்துக் கொண்டே
சென்றவர்கள்
ஒருநாளும் வரவே
மாட்டார்கள்…

வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.
முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.
வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல்
ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.
அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.
உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.
எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.
உங்களை வெல்ல யாராலும் முடியாது.
அப்போது உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை,அவரின் மனநிலை அறிந்து பேசுவது மிகவும் நல்லது…
ஏனெனில் அடியை கூட பொறுத்துக் கொள்ளும் இதயம் சிலரின் வார்த்தைகளை பொறுக்காது.!
எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

Powered by J B Soft System, Chennai.