Menu Close

முதலமைச்சர்பொதுநிவாரண நிதிக்கு பங்களிப்போம் : பன்னீர்செல்வம் MLA

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா வைரஸினால் இந்த உலகமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம் தமிழக மக்களை தாய் போல பாதுகாத்து கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம், என்னுடைய ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய், நம் கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.

நம் மக்கள் நலன் காக்க, இயன்றவர்கள் பெரிய மனதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு சிறிய தொகை ஆயினும் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நம் தமிழக மக்களின் நலன் காக்க பாதுகாக்க பயன்படும்…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
தலைமை செயலகம்,
சென்னை – 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070,
IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.