Menu Close

காலை வணக்கம்

ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.
இனிய சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.
தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

வெற்றி என்பது முடிவும் அல்ல

வெற்றி என்பது முடிவும் அல்ல,
தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.
இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது.
உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,
புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.
உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.
வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பணக்காரர்கள்
தோல்வியடையக் கூடாது என்று செயல்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.
ஒருவருக்கொருவர் உதவிடத் தயாராக இருந்தால்..
இவ்வுலகில் அனைவரும் வெற்றியாளர்களே!
இனிய புதன்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை

எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்.. அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.
முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்.. மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்.. முகத்தின் அழகு மாறிவிட கூடியது.. மனதின் அழகு மாறுவதில்லை.
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை.. தன் உயிர் இருக்கும் வரை முயற்சி செய்து கொண்டு இருப்பவனே மனிதன்.!
அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷம்.!
உங்கள் இலக்கை அடைய இடைவிடாது முயற்சியுங்கள்.. இலக்கை அடையும் வரை.. அது உங்கள் அருகில் இருந்தால் அதிஷ்டம்.. வெகுதூரத்தில் இருந்தால் நம்பிக்கை.. இலக்கை அடையாமல் போனால் அனுபவம்.!
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு

கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு…
கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு…
செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்…
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்… கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தண்டனை அல்ல. அது ஒரு சோதனை மட்டுமே ..
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும்ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்..
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோசத்தை கொண்டு வந்தே தீரும்.
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள்

கடந்த காலத்தில்
இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
எதிர் காலத்தை நினைத்து
கனவு காணுங்கள்
ஆனால்
இன்றைய நாளில்
மகிழ்ச்சியாக இருங்கள்
ஏனெனில் இன்றைய நாள்
கடந்து விட்டால்
மீண்டும் கிடைக்காது.

சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.

வாழ்வில் தனியாகப் போராடி சோர்ந்து நிற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்குமான,
வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல.
உண்மையான வார்த்தைகள்.
“கவலைப்படாதீர்கள்”
இறைவன் என்றும் உங்களுடன் உங்களுக்குள் தான் இருக்கிறார்.
இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தையே வழிநடத்திச் செல்லும் பேராற்றல் உங்கள் வாழ்வையும் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும்.
இறைவன் எப்போதும் நம்முடன் நம்முள் தான் இருக்கிறார். நாம் தான் உணர்வதில்லை. உணர முயற்சி செய்யுங்கள்.
சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
எந்த நிலையிலும் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றக் கூடிய மாபெரும் சக்தி உங்களுக்குள் உள்ளது.
தைரியமாக தன்னம்பிக்கையோடு இருங்கள்.
விரைவில் சிறப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
உங்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று அற்புதமாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்கை உங்களின் கையில்…

அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று எவருக்கும் காத்திருக்காதீர்கள்…
உங்கள் வாழ்கை உங்களின் கையில்…
உங்கள் வளர்ச்சியையும் வாழ்கையையும் சந்தோசத்தையும் பிறரிடம் தேடாதீர்கள் …
பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்…
வாழ்கையை வாழ்ந்து தீருங்கள்… காத்திருந்து அல்ல !

வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!!

ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை ஊன்றி எழு….!
உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே உள்ளதை நம்பு…!!
உயரப் பறக்க நினைக்காதே உயரும் வரை போராடு….!!
உறவில் உரிமையை கொடுங்கள்….!!
வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!!
அன்பில் உண்மையை கொடுங்கள்…!!
நட்பில் நேர்மையை கொடுங்கள்….!! சந்தோஷம் தானாக அமையும்….!!
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..!

நமக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை
நம்மை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் நமக்கு எதிராகத்தான் இருக்கும்.
அவற்றை எண்ணி வருந்தக் கூடாது
விமர்சனங்கள் மீது ஏறி மிதித்து நிமிர்ந்து நிற்போம்.
காலம் மாறும், முயற்சி கைகொடுக்கும். கனவு நனவாகும் உலகம் நம்மை உணரும்..
நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..
எல்லா மனிதர்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்க வேண்டாம்..
காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும் ..
கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது நடக்கும் .
இனிய சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்… நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.
இங்கு அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் குறைவில்லை.

நமது பிரபஞ்சத்தில் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மனிதர்களாகிய நாமும் நமது வாழ்க்கை பயணத்தில்
தினமும் ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணத்தை தொடர்கிறோம்.

அது ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, நிம்மதியோ, செல்வமோ… ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணம் இருக்கிறது.

ஆனால் தேடும் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. காரணம் நம்பிக்கை.

நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்…
நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நீங்கள் தேடுவதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்.
அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் தேடல் உண்மையானதாக இருந்தால்
நீங்கள் தேடுவதை நிச்சயம் ஒருநாள் அடைந்தே தீர்வீர்கள்.

மற்றவர்களின் தேவையற்ற எதிர்மறையான கருத்துக்களுக்கும், அவநம்பிக்கைக்கும் இடம் தராதீர்கள்.
படைத்தவன் மனது வைத்தால் உங்கள் நிலையை மாற்ற ஒரு நொடி போதும்.
யாருடைய நிலையும் எந்த நொடியிலும் மாறலாம்.

நம்புங்கள்! நன்றாக வாழ்வீர்கள்!

நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம்

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.
நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது.
நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract what we think)
நமது ஒவ்வொரு செயல்களும் கவனிக்கப்பட்டு அதன் விளைவாக நமக்கு நடக்கும் அனைத்தும் நடக்கின்றது.
நமது ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்பட்டு அவற்றிக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது.
சிலருக்கு வேண்டியது கிடைக்காமல் போவதற்கான ஒரே காரணம்
எதிர்மறை சிந்தனைகளால் வரும் நம்பிக்கையின்மை.
முதலில் பிரபஞ்சத்தை நம்பாதவர்கள் இறுதியில் தன்னையே நம்பாமல் தோல்வி அடைகின்றனர்.
முழு நம்பிக்கையுடன் நாம் முயற்சிக்கும் அனைத்தும் நிச்சயமாக பிரபஞ்சத்தால் ஒரு நாள் நமக்கு வழங்கப்படும்.
உங்களை நம்புங்கள்.
உங்களைப் படைத்த இறைவனை நம்புங்கள்.
அந்த இறைவன் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை நம்புங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்!

வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார்.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.
அளவிட முடியாதது.
இறைவனுடன் பேசுங்கள்.
அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார்.
வேண்டுவன எல்லாம் தருவார்.
சரியான நேரத்தில் தருவார்.
பொறுமையாக இருங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய பொறுமை இறைவனையும் கரைய வைத்து எல்லாவற்றையும் அடைய வைக்கும்
மனநலம் உடல்நலம் இரண்டிற்குமான அருமருந்து பிரார்த்தனைகளே.
உங்கள் பிரார்த்தனைகள் மட்டும் வலிமையானதாக இருந்தால் உங்களால் அடைய முடியாதது எதுவுமில்லை.
இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம்.
இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே
முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர்.

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

உங்கள் வாழ்வில் உங்களால் எல்லா சூழ்நிலைகளையும் தனியாக கடக்க முடிந்தால் உங்களை விட மிகச் சிறந்த வீரர் யாரும் இல்லை.

தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.
இந்த பிரபஞ்சமே உங்களுக்கு துணையாக நிற்கும்.

வாழ்ந்து காட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக உங்களால் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும்.

வாழ்ந்து காட்டி விடுங்கள்!
இறைவன் அருளால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டிச் சிரிக்கும் உலகம்..!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!

Powered by J B Soft System, Chennai.