Menu Close

காலை வணக்கம்

நாம் என்று, நல்லவரோடு சேர்ந்திருந்தாலே…. வெற்றி நிச்சயம்!

நான் எனும் ஆணவம் தலைக்கு வந்தால்,
வீணாவது உறுதி..‌
நிலைக்கு நிலை, மாற்றம் வந்து கொண்டே தான்
இருக்கிறது….
கோபுரத்தின் உச்சிக்கே சென்றாலும்,ஏற்றிய ஏணியின் படிகள் வேண்டுமல்லவா?
தனி மரம் தோப்பாகாது!
நாம் என்று,
நல்லவரோடு சேர்ந்திருந்தாலே….
வெற்றி நிச்சயம்!

சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம். பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மெளனம்.

எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் மிகச்சிறந்த விடை “மௌனம்”. எந்த ஒரு சூழ்நிலைக்கும் சிறந்த எதிர்வினை
“புன்னகை”.
சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம். பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மெளனம்.
விவாதத்தை விட கலந்துரையாடல் மேன்மையானது. விவாதம் என்பது யார் சரியாக கூறினார் என்பதில் போய் முடியும். கலந்துரையாடல் என்பது. எது சரியானது என்பதில் போய் முடியும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. ஒப்பீடு செய்து பார்ப்பது வீணாகும்

வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.

எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயனித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.
சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு.
வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.
பொய்யும், நடிப்பும் கூட்டத்தில்
கொண்டாடப்படும். உண்மையும், அன்பும், தனிமையில் தள்ளாடும்.
– (ப/பி)
பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய்
விட்டுவிடும்.
– வள்ளலார்.

உரிய நேரத்தில் உரிய செயலை செய்தால் உலகை வெல்லலாம்…

உழைக்கும் காலத்தில்
சோம்பேறியாக இருந்துவிட்டு
அறுவடை காலத்தில்
அரிவாளுடன் சென்றால்
பயனில்லை.
உரிய நேரத்தில்
உரிய செயலை செய்தால்
உலகை வெல்லலாம்…

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு…
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.

நேரம் என்பது நாம் உருவாக்குவது, எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்…

காலம் பறக்கும் என்பது உண்மைதான்.ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்…
நேரம் என்பது நாம் உருவாக்குவது, எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்…
இரண்டு சக்தி வாய்ந்த போர்வீரர்கள் நேரம் மற்றும் பொறுமை, தயக்கமின்றி அமைக்கப்பட்டதைச் செய்யுங்கள்…

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.
சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.

சிந்தனைச் சிதறல்
மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.
வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும் காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
– சுவாமி விவேகானந்தர்.
நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.
ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.
யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.

இல்லாத ஒன்றை மட்டும் நினைத்து நினைத்து ஏங்காதீர்கள்.

இந்த பூமியில் அனைவரின் வாழ்க்கையும் நிறைகளும் குறைகளும் கலந்ததுதான்.
நிறைகள் மட்டும் உள்ளவர்களும் யாருமில்லை. குறைகளோடு மட்டும் வாழ்பவர்களும் யாருமில்லை.
வாழ்வில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு குறையை தேடித்தேடி நினைத்து கவலைப்படாதீர்கள்.
இல்லாத ஒன்றை மட்டும் நினைத்து நினைத்து ஏங்காதீர்கள்.
நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை
பல பேரின் பல நாள் கனவாக இருக்கலாம்.
நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் கூட சிலரால் முழுமையாக நிம்மதியாக சுவாசிக்க முடியாமல் இருக்கலாம்.
நீங்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள்.
எனக்கு இது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”
என்று நினைக்காமல்…
எனக்கு நடக்கும் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது.
எனக்கு என்று உள்ளது என்னிடம் நிச்சயமாக வரும்.
எனக்கு தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது .
எனது விடாமுயற்சி பல மடங்கு பலன்களைத் தரும்.
நான் மிகவும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்று நினைத்து பாருங்கள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.

கோபப்படவில்லையென்றால், பொறுமையாக இருப்பாய்…

மறந்தால் மன்னிக்கக் கற்றுக் கொள்வாய்…
மன்னித்தால் கோபப்படாமல் இருப்பாய்…
கோபப்படவில்லையென்றால், பொறுமையாக இருப்பாய்…
பொறுமையாக இருந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் எளிமையாகி விடும்…!

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.

காலம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும்.
தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்து புலம்புவதை விட்டு விட்டு சற்று திரும்பிப் பாருங்கள்.
இங்கு ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றன.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.
தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.

கஷ்டபடும்போது அழுதுடனும்!!

கஷ்டபடும்போது
அழுதுடனும்!!
சந்தோஷமா
இருக்கும்போது
அந்த கஷ்டத்த
நினைச்சி சிரிச்சிடனும்!!
அழுகை, சிரிப்பு 2ம்
அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!

Powered by J B Soft System, Chennai.