Menu Close

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து
இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

அரசாங்கமும், மருத்துவர்களும்
உச்சகட்ட விவேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க…

விடிந்தும் விடியாமல் நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த நாட்களில் இருந்து இந்த மானுடம் விரைவில் விடுபட…

வழிபாடாய்…
விஞ்ஞானமாய்…
ஆன்மிகமாய்…

ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க,
நம் பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப
நம் வீட்டினில் இன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு…
தீபம் ஏற்றுவோம்…

இருளில் நாம் ஏற்றும் வெளிச்சத்தால்
விடியட்டும் இந்த உலகு…
விலகட்டும் கொரோனா என்ற மாயப்பிடிகள்…

பாரதப்பிரதமர் சொன்னதுபோல்…
பாரதியார் பாடி சென்றது போல்…
நாம் ஒருவர் அல்ல…

130 கோடி முகமுடையாள்…
உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்…
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்
என்று உணர்வால் ஒன்றுபடுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.