Menu Close

விதைத்ததே விளையும் என்பது விதி காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஆம்…
எல்லாம் விதிப்படியே நடக்கும்…

புவியீர்ப்பு என்பது விதி
தீ சுடும் என்பது விதி

விதைத்ததே விளையும் என்பது விதி
காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…

இந்த விதியை புரிந்துகொள்ளுதல் மதி
விதியை புரிந்து அதற்கேற்றார்போல் வாழ்வது மதி

உழைத்தால் உயர்வு வரும் என்பது மதி உணர்ந்த விதி !
உழவும், உற்பத்தியுமே மக்களின் வாழ்வுக்கு வழி என்பது மதி உணர்ந்த விதி !

விதியை மதியால் வெல்ல வேண்டாம்…
விதியும் மதியும் கூட்டணி அமைக்கட்டும்…
விதியும் மதியும் இணைந்து பயணிக்கட்டும்…

விதியுடன் இணைந்த மதி எம்மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.