Menu Close

காலை வணக்கம்

வாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கை நம்மை எந்த
கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…
நம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் !

நிஜ வெற்றி அடைவதில் இல்லை…
தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…

தொழில் செய்வோர்…
வேலை செய்வோர்…
மாணவர்கள்…
ஆண்கள்…
பெண்கள்…
குழந்தைகள்…

எல்லோருக்குமாக மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்
என் சிந்தையும் செயலும்
எம் மக்கள் வாழ்வாங்கு வாழ
செம்மை பட்டுக்கொண்டே இருக்கும்…

நம்பிக்கை கொள்ளுங்கள்…
உங்களின் ஒவ்வொரு உயர்விலும்…
என் பங்களிப்பும் ஆதரவும் என்றும் இருக்கும்…

புதியதொரு விடியல் காண்போம்…
புது சரித்திரம் படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நாம் வாழும் இந்த உலகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆம் !
நாம் வாழும் இந்த உலகம்
ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !!

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது உருவாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களால்,
நம் ஊர், தொகுதி மக்களால்…
இந்த நாடு நலம் பெறட்டும்…
இவ்வையகம் சீர் பெறட்டும்…

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்…
இவ்வுலகின் பலபகுதிகளில்
நல் விளைவுகளை அது உருவாக்கும்…

மனித சங்கிலி அமைக்க
கைகள் கோர்க்காவிட்டால் என்ன,

மனங்களால் ஒன்றிணைந்து
மன சங்கிலி அமைப்போம்…

மனம் மணம் வீசட்டும்…
அதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து
இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

அரசாங்கமும், மருத்துவர்களும்
உச்சகட்ட விவேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க…

விடிந்தும் விடியாமல் நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த நாட்களில் இருந்து இந்த மானுடம் விரைவில் விடுபட…

வழிபாடாய்…
விஞ்ஞானமாய்…
ஆன்மிகமாய்…

ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க,
நம் பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப
நம் வீட்டினில் இன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு…
தீபம் ஏற்றுவோம்…

இருளில் நாம் ஏற்றும் வெளிச்சத்தால்
விடியட்டும் இந்த உலகு…
விலகட்டும் கொரோனா என்ற மாயப்பிடிகள்…

பாரதப்பிரதமர் சொன்னதுபோல்…
பாரதியார் பாடி சென்றது போல்…
நாம் ஒருவர் அல்ல…

130 கோடி முகமுடையாள்…
உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்…
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்
என்று உணர்வால் ஒன்றுபடுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிச்சம் தோன்றும் இருளிலும், மனத்திடம் கொள்வோம்…

எல்லாம் வல்ல இறைவா,
கொரோனா என்ற இந்த கோரப்பிடியில்
இருந்து எம் மக்களை மீட்பாயாக !

நீ இன்றி அணுவும் அசையாது…
அனுபவத்தாலும் அறிவாலும் அறிவோம் இதை…
காரணமில்லாமல் காரியமில்லை…

காரணம் கேட்கவில்லை…
காப்பாற்ற வேண்டுகிறேன்,
எம் மக்களை இந்த மாய பிடியிலிருந்து…

எதற்கோ எம் மக்களை தயார் செய்கிறாய்…
எதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம்
நீ எங்களுள், எங்களுடன் இருக்கும்போது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வெளிச்சம் தோன்றும் இருளிலும்,
மனத்திடம் கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கொரானா முடிந்தது என்றார்கள்… கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா முடிந்தது என்றார்கள்
கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்
கொரானா குறைந்து விடும் என்கிறார்கள்

எப்படி இருந்தாலும்
தவிர்த்து இருப்போர்,
கொரானாவை தடுத்தவர்களாகிறார்கள்…

சமூக விலகலை கடைபிடித்து இருப்பவர்கள்
வருமுன் காத்து தங்கள் குடும்பத்தையும்
பாதுகாத்து பொறுப்புள்ள குடிமகனாக கடமை ஆற்றுகிறார்கள்…

உலகமே கொரானா எனும் மாயப்பிடியில் தவிக்கும்போது ! குடும்பத்துடன் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம் என்று எண்ணி பாதுகாப்புடன் இருங்கள் !

விரைவில் நிலைமை சீர் பெற வேண்டுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

தனித்திருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா என்ற இந்த நுண்ணுயிரிகள் தாக்கம்
அதிகரித்து இருக்கும் இவ்வேளையில்
கொரானாவின் ஏஜென்ட் ஆக மாறி
இந்த கொரானா நுண்ணுயிரியை
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும்
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு
கொண்டு சேர்க்கும் ஏஜென்டாக
மாறிவிடாதீர்கள்…

தனித்திருங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…
உங்களுக்கு பல உயிர்களை காத்த புண்ணியம் கிட்டும் !

தனித்து இருந்தாலும்
தொடர்பில் இருங்கள்…

நம் ஒவ்வொருவருக்கும்
இப்போதைய தலையாய கடமை
மற்ற ஒவ்வொருவரின்
ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதும்
உறுதிப்படுத்துவதுமே ஆகும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

வதந்திகளை பரப்பாதீர்… வதந்திகளை பார்க்காதீர்… வதந்திகளை கேட்காதீர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வதந்திகளை பரப்பாதீர்…
வதந்திகளை பார்க்காதீர்…
வதந்திகளை கேட்காதீர்…

உண்மையாயினும் சொல்லவேண்டிய
தருணம் பார்த்து
தேவை பார்த்து
விளைவை யோசித்து மட்டுமே,
எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு
தெரிவியுங்கள்…
பகிருங்கள்…

உறுதிப்படுத்தப்படாத
உதவாத
உண்மை இல்லாத
விஷயங்களை பிறருக்கு
தெரிவிக்காதீர்கள் அது விஷமாக மாறலாம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

தனித்திருங்கள்… விழித்திருங்கள்… உங்கள் வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனித்து இருத்தலும்…
தவிர்த்து இருத்தலும்…
தடுத்து இருத்தலும்…
உச்சகட்ட அறிவாகும்…
அதுவே விழிப்புணர்வும் ஆகும்…

ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பிலும்
பல நூறு உயிர்கள் காப்பாற்றப்படுகிறது !

அன்பாக உரைக்கிறேன்…
கடிந்து உரைக்கிறேன்…
இடித்து உரைக்கிறேன்…

என் மக்களாகிய உங்கள் நலனுக்காக !

தனித்திருங்கள்…
விழித்திருங்கள்…
உங்கள் வீட்டிலேயே இருங்கள்…
பாதுகாப்புடன்…

தற்காலிகமாக இழந்தது எதுவாயினும்
விரைவில் மீட்டு பெறலாம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

தனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

விரைவில் விடியும் தமிழகம் கொரானா இல்லாமல் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கொரோனா வைரஸ் என்ற பெரிய சவாலை இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா வைரஸ் என்ற
பெரிய சவாலை இந்த உலகம்
சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்…

ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்…
உங்களில் ஒருவனாக,
உங்கள் சகோதரனாக,
உங்கள் வீட்டுப் பிள்ளையாக,
உங்களிடம் உங்கள் பாதம் தொட்டு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்…

காட்டுத்தீ போல் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த நமது அரசின் அறிவுறுத்தல் படி வரும் நாட்களில் வீட்டிலேயே தனித்திருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இந்த சமூகத்தையும் பாதுகாக்க பாதம் தொட்டு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்…

என் அன்பிற்கினிய மக்களே இந்தக் கொடிய வைரஸினால் நம் தொகுதியில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்…

உலகத்தை அச்சுறுத்தும்
அபாயமாக உள்ள இந்த வைரசுக்கு
ஒரே உபாயம் – சமூக விலக்கு மட்டுமே…

I DO NOT SCARE YOU,
I JUST CARE FOR YOU !

உங்கள் நலனில் அக்கறையுடன் அன்பான காலை வணக்கங்கள் !

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

விலகி இருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கவனம் !
கொரானா நுண்ணுயிர் தாங்கிய
ஸ்லீப்பர் செல்களாக பலர்
வெளியே உலவிக் கொண்டு இருக்கலாம்…

விலகி இருங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…

அத்தியாவசிய தேவைக்கு
வெளியே சென்றால்
சமூக விலகலை கடைபிடியுங்கள்…

அரசு வழிகாட்ட…
மக்களாகிய நீங்கள் அதை பின்பற்ற…
சுமுகமான சமூகத்தில்…
கொரானாவை தவிர்த்திருப்போம்…

தனித்திருப்போம்,
கொரானாவை தவிர்த்திருப்போம்…
தமிழகத்தை காத்து இருப்போம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா…
வந்த பின் சிரமப்படுவதை விட
வரும் முன் காப்பதே நல்லது…

தனித்திருப்போம்,
கொரானாவை தவிர்த்திருப்போம்…

நாம் வீடுகளுக்குள் தனித்து இருந்தாலும்
மனங்களால் ஒன்றிணைந்து புது யுகம் படைக்க தயாராவோம் !

சிந்தித்து செயல்படுங்கள்…
வாழ்க்கை சிதறாமல் சீர் படட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்… சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்…
சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…

உடன் இருப்போரின் மகிழ்வையும்
உள்ளத்தின் நிறைவையும் உணர்வீர்கள்…

மிக்க நன்றியுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உண்மை அறிவோம் ! உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை அறிவோம் !
உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !!

பயணங்களைத் தவிர்ப்பது நல்லது…
சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது…

சில வாரங்களுக்கு உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள்…

கொரானா வைரஸ் நமக்கு பரவாமல் தடுப்போம் !
கொரானா வைரஸ் நம்மால் பரவாமல் தடுப்போம் !

மீண்டு வருவோம் அனைத்தையும் மீட்டெடுப்போம் !

அன்பான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Powered by J B Soft System, Chennai.