Menu Close

காலை வணக்கம்

விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.
தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.

உங்களுக்கான சரியான நேரம் வந்து கொண்டிருக்கிறது.

உங்களுடைய முயற்சியை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
உங்களுக்கான சரியான நேரம் வந்து கொண்டிருக்கிறது.
உங்களின் முயற்சிக்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையே மாபெரும் சக்தியாகும்.
தன்னம்பிக்கையை பற்றிய அழகான வரிகள். விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.
வீழ்ந்தாலும் எழுவேன் உதயமாகும் சூரியனைப் போல பிரகாசமாய்.
நான் வீழ்ந்து போனாலும் என் முயற்சியால் மீண்டு வருவேன். என்னில் ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் தன்னம்பிக்கை.

சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

உலகின் மொத்த சந்தோஷத்தின் அளவைக் கூட்ட நம்மால் முடியும்?
எப்படி தெரியுமா
தனிமையாகவும் தாழ்வாகவும் உணரும் சிலருக்கு ஊக்கம் தரும் சொற்களை தருவதன் மூலம் தான்.
நாம் சொன்ன சொற்களை நாமே மறந்தாலும் கூட அதனால் பயன் பெற்றவர் வாழ்க்கை முழுவதும் அந்த சொற்களை நினைவில் வைத்திருப்பார்….!
நகைச்சுவையாக, நாம் வெளிப்படுத்தும், சில நல்ல கருத்துக்கள்கூட.!
சில சமயங்களில், நமக்கு எதிராக, திருப்பி விடப்படும்.?.!
பழிச் சொல்லாக…
அதை, நாம் ஆழ்ந்த காயம், அடைந்த பின்னர்தான் உணர்வோம்.!
சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி உலகத்தை உறுதியோடு பாருங்கள்…

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்..
உறங்கும் விதை விழிக்கும் வரை…
உறையிட்ட வெற்றுப் பொருள் தான்…
உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்….
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி…
உலகத்தை உறுதியோடு பாருங்கள்…
வானம் ஒன்று…
வாழ்க்கையும் ஒன்று…
இதில் யாருக்கும் வேறுபாடில்லை.
ஒர் சாண் வயிற்றுக்கு மேலே எதுவும் நிரம்புவதில்லை….
தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்….
தடைகளை உடைத்திடுங்கள்…
தோல்விகளைப் படிக்கட்டாக்கி
வெற்றிக் கோட்டையை வென்றிடுங்கள்!

கண் மூடினால் தெரியும் கனவுகளை கூட நிஜமென்று நம்பும் கண்கள்…!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!!

உங்கள் நினைவால் செய்வதெல்லாம் நன்மையே…

புரட்சித்தலைவர்
எம்ஜிஆரின் பிறந்த நாள்…
தெய்வம் பூமியில்
அவதரித்த நாள்…
என்றென்றும்
எங்கள் இதயங்களில்
வாழும் இதயக்கனியே…
உங்கள் நினைவால்
செய்வதெல்லாம்
நன்மையே…
உங்கள் நினைவால்
சிந்திப்பது எல்லாம்
நன்மையே…
நினைவெல்லாம் நீயே
என் இதய தெய்வமே…
உங்கள் நினைவால் வாழ்கிறோம்…
கொடுத்த வள்ளல்
உங்கள் நினைவாகவே வழங்குகிறோம்…

உழவும் உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

உழவும்
உற்பத்தியுமே
உயர்வுக்கு வழி…
உழவுக்கு நன்றி சொல்லி,
உலகத்திற்கே உணவளிக்கும்
உழவருக்கு நன்றி சொல்லி…
ஊர் உயர
உழவர்கள் உயர
எல்லோரும்
எல்லா
வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ
மாட்டுப் பொங்கல் மற்றும்
உழவர் தின வாழ்த்துகளுடன்…

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு..
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.*
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.*
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.*

சாதாரண வாழ்க்கையை வாழ்வதே சாதனையாக உள்ளது இன்றைய உலக சூழநிலை

வாழ்க்கை என்பது ஒரு வளையம் போன்றது …
தொடக்கமும் முடிவும் தெரியாத ஒன்று …
சாதாரண வாழ்க்கையை வாழ்வதே சாதனையாக உள்ளது இன்றைய உலக சூழநிலை.
மதிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது.
சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். சிலருக்கு அமைதி. சிலருக்கு ஆனந்தம்.
நேரமும், ஆரோக்கியமும் இருந்த வாலிப பருவத்தில் பணம் இல்லை …
ஆரோக்கியமும், பணமும் இருந்த இளமை பருவத்தில் நேரம் இல்லை …
நேரமும், பணமும் இருக்கும் முதுமை பருவத்தில் ஆரோக்கியம் தான் இல்லை …
இது தான் வாழ்க்கையின் டிசைன்

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.

கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…

கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு…
கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு…
செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்…
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்… கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தண்டனை அல்ல. அது ஒரு சோதனை மட்டுமே ..
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும்ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்..
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோசத்தை கொண்டு வந்தே தீரும்.

ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….

எல்லோருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும் … ஒன்று வாழ்கிற வாழ்க்கை … இன்னொன்று வாழ நினைத்த வாழ்க்கை …
ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….
வலிகளை தாங்கும் பொறுமையும் … அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் … எதுவும் பெரிதாக தெரியாது …
இன்று உண்மையை மட்டும் பேசுபவர்களை விட … அடுத்தவர்கள் நம்பும் படியாக பொய் பேசுபவர்களே இங்கு வாழ முடிகிறது …
அதே அவரை உண்மையாக வெறுத்தால் … சொல்லிவிடுங்கள் , செயலில் காட்டாதீர்கள் …
ஒரு உளவியல் உண்மை சரியான ஒன்றை சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேசவில்லை என்றால் … தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி !

எண்ணங்கள் வண்ணங்களாக…
செயல்கள் புதியதாக…
புத்துணர்வுடன் புத்தாண்டு…
சரியான
தொடக்கத்தின்
தொடர்ச்சியே வளர்ச்சி !
புதிய நாள்…
புதிய தொடக்கம்…
புதிய எண்ணங்கள்…
புதிய செயல்பாடுகள்…
புதிய திட்டங்கள்…
புதிய இலக்குகள்…
புதிய ஆண்டு…
இன்று புதியதாய் பிறந்தோம்…
புதிய ஆற்றலுடன் புது உலகம் படைப்போம்…
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…

எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது

தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில்.
எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.
எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான்.*
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்…. ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து விடக் கூடாது….
என்ன நடந்தாலும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வாழப் பழகி விட வேண்டும்….
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்

தடுமாறினாலும் காட்டிக்கொள்ளாதீர்கள்….
தவறி விழுந்தாலும் கூச்சலிடாதீர்கள்…
அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்….
பிரச்சனைகளை தீர்க்க பழகிக் கொள்ளுங்கள்.
கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாய்ப்புகள் வரும் போது நம்மால் அதை செய்ய முடியுமா என்ற தயக்கமே
நாம் வாய்ப்புகளை தவற விடுவதற்கான முக்கிய காரணம்.
நல்லவர்களை நாம் தேடத் தேவையில்லை.
நாம் நல்லவராக இருந்தால் போதும்,
நம்மை தேடி நல்லவர்கள் மட்டுமே வருவார்கள்.
உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள்.
மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்.

Powered by J B Soft System, Chennai.