Menu Close

காலை வணக்கம்

பசி என்ற உணர்வு போன்று பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அறியாமையும், அலட்சியமும்
உருவாக்கிய அவலம்
ஆயிரக்கணக்கானோர்க்கு கொரோனா நோய் தொற்று…

தடுக்க முடியும் என்பது ஆறுதல்…
தவிர்க்க முடியும் என்பது அறிவியல்…

பசி என்ற உணர்வு போன்று
பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

முக கவசம் உங்கள் குடும்பத்தின் உயிர் கவசம்…
சமூக விலகல் உங்களை ஆபத்திலிருந்து விலக்கி வைக்கும்…

கொரோனா தடுப்பு என்பது சட்டமாகவும்,
அரசின் நடவடிக்கையாகவும் மட்டும் அல்லாமல்…
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

வீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும், விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சிந்தனைகள் தர்மத்தை ஒற்றி பிறக்கட்டும்…
செயல்கள் அதை பற்றி நிகழட்டும்…

அடுத்தவர் செய்யும் செயலுக்கும்
சொல்லுக்கும் எதிர்வினை ஆற்றாதீர்கள்…

தர்மத்தை மனதிற்கொண்டு வினை ஆற்றுங்கள்…

வீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும்,
விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து !
கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

கொரானா பற்றிய அறிவும்
அதை கவனத்துடன் கையாளும் விதமும்,
நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும்
தொற்றிலிருந்து காக்கும்…

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

கொரானா நம்மை கடந்து போகும்…
நாமும் அதை தொடாமல்
தொட விடாமல் கடந்து போவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது
சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது
அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு
மனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி
வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

அளப்பரிய பிரபஞ்சம்… அள்ளிக்கொடுக்க தயாராகவே இருக்கிறது எப்போதும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லதொரு வாழ்வு வாழ…

யாரும் யாருக்காகவும்
விட்டுக்கொடுக்க வேண்டாம்…

யாரும் யாரிடம் இருந்தும்
தட்டிப் பறிக்கவும் வேண்டாம்…

அளப்பரிய பிரபஞ்சம்…
அள்ளிக்கொடுக்க
தயாராகவே இருக்கிறது எப்போதும்…

நல் எண்ணங்களால்…
நேர்மையான ஆழ்ந்த சிந்தனைகளால்…
ஆத்ம சக்தியால்…
அள்ளி எடுத்து அனுபவித்து வாழலாம் எப்போதும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

சக மனிதர்களுக்கும் நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகத்தின் சக்திகளில்
பிரதான சக்தி மனித சக்தி…

வாழ்வாதாரமும், பொருளாதாரமும்
புரட்டிப்போடப்பட்ட நிலையில்

மனித சக்தியின்
தனித்துவத்தையும், மகத்துவத்தையும்
புரிந்து போற்றுவோம்…

சக மனிதர்களுக்கும்
நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

வல்லமை கொண்டு புது
வாய்ப்புகளை கண்டறிவோம்…

(இன்று பொருளாதாரத்தில்
பின்தங்கிய 290 குடும்பங்களுக்கு
கோழி வளர்ப்பு தொழில் ஆரம்பிக்கப்பட்டது)

பொருளாதாரமும், வாழ்வாதாரமும் மீட்டெடுக்க
நம் மக்களுக்கு துணை புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம், பலம் தாண்டி, ஒழுக்கமே நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒழுக்கம் இல்லாத கல்வி வீண்…
ஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது…
ஒழுக்கம் இல்லாத பலம் ஆபத்து…
ஒழுக்கம் இல்லாத அறிவு தந்திரத்திற்கு வழி வகுக்கும்…

ஆதலாலே ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது பொதுமறை…

ஒட்டுமொத்த சமூகத்தின்
ஒழுக்கப் பிறழ்வே
இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும்
கொரோனா பரவல் போன்ற
சவால்களுக்கு காரணமாகிறது…

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம்,
பலம் தாண்டி, ஒழுக்கமே
நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும் நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…

அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும் சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இயற்கையின் உருவாக்கத்தில்
ஒவ்வொரு உயிரினத்திற்கும்
ஒவ்வொரு விதமான சவால்கள்…

அதில் மனித இனம்
பல நூற்றாண்டுகளாக
பல சவால்களை
சந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது…

அதில் கொரோனா என்ற சவால் இந்த 2020ல்…
கொரோனா என்ற வைரஸ்
மக்களுக்கு மக்கள் மூலமாகவே பரவுகிறது…

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும்
சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

மனித குலத்தின் ஒற்றுமையாலும்
விவேகத்தாலும், மேன்மையாலும்
கொரோனாவை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவின் தொற்று
1 லிருந்து 10 ஆகவும்…
10 லிருந்து 100 ஆகவும்…
100 லிருந்து 1000 ஆகவும் பரவிப்போனதற்கு…
கொரோனா என்ற கொடிய வைரஸ் மட்டும் காரணமல்ல…

தனிப்பட்ட பலரின்
அறியாமையும் அலட்சியமும் காரணமே…

கவனம்…
இந்த உலகத்திற்கு
உங்கள் இருப்பும் வாழ்வும்
மற்றொரு எண்ணிக்கை…

ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…

இதில் கவனக்குறைவு வேண்டாம் என் அன்பிற்கினிய மக்களே…
முக கவசம், சமூக விலகல் என்ற விவேகத்துடன்
கொரானாவை தடுத்திடுவீர், தவிர்த்திடுவீர்…
உங்கள் குடும்பத்தை காத்திடுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

என் தொகுதியில் உள்ள உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்தப் பேரிடர் காலத்தில்…
மக்கள் மனங்களில் பயம் நிரம்பிய
இந்த தருணத்தில்…

கலசப்பாக்கம் தொகுதியின்
ஒட்டுமொத்த மக்களின்
சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான்
உறுதிபட தெரிவிப்பது…

நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்…
எந்த கட்சியாக இருந்தாலும்…
எந்த பிரிவாக இருந்தாலும்
எந்த பொருளாதார நிலையில் இருந்தாலும்…

என் தொகுதியில் உள்ள உங்கள்
ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…

முக கவசம் அணியுங்கள்…
சமூக விலகலை பொறுப்புடன் கடைபிடியுங்கள்…
உங்களின் ஒவ்வொரு பொறுப்பான செயல்பாடும்
நம் தொகுதியில் பல உயிர்களை காப்பாற்றுகிறது!

உங்களை காக்கும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்…
கொரோனா என்ற மாய வலையை வேரறுப்போம்…

பொறுப்புடன் கூடிய மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

கேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்… பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்
நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை!

அதை நாம் எதிர்கொள்ளும் விதமும்
அதற்கான நம் விடையுமே வாழ்வையும்
வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது…

கேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்…
பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்… நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்முடைய ஒவ்வொரு நகர்வையும், செயலையும்
இந்தப் பிரபஞ்சமும் வரலாறும் பதிந்து கொண்டே இருக்கிறது…

வருங்காலமும் வரும் தலைமுறையும்
சுவாசிக்கும் இந்த பதிவுகளை…

எப்படி பதிய போகிறோம் நம் வாழ்க்கையை?
வாழ்ந்து உயர்ந்த கதையாகவா…
விழுந்து காய்ந்த கதையாகவா…
விழுந்தாலும் விளைந்து உயர்ந்த வரலாறாகவா?

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்…
நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

நம்மால் உலகம் புன்னகை பூக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா…
பொருளாதார மந்தம்…
சமூக குழப்பம்…
பேரிடர்… எதுவாயினும்…

பயம் தீர்வாகாது…
குழப்பம் வலிமை சேர்க்காது…

தடுப்பதும், தீர்ப்பதும் தீர்வாகாத போது
தனித்திருத்தலும், தவிர்த்திருத்தலும் தீர்வாகலாம்…

தனித்து இருப்போம்…
தவிர்த்து இருப்போம்…
கொரானாவையும், பயத்தையும், குழப்பத்தையும் கூட…

எம் மக்களை கொரானாவிலிருந்தும், பயத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் காத்து அருள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

Powered by J B Soft System, Chennai.