கஷ்டபடும்போது அழுதுடனும்!! சந்தோஷமா இருக்கும்போது அந்த கஷ்டத்த நினைச்சி சிரிச்சிடனும்!! அழுகை, சிரிப்பு 2ம் அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!
கோபத்திலோ.. வருத்தத்திலோ.. இருப்பவர்களை சிறிது தனிமையில் விடுங்கள்…!! ஆனால் தனியாக விட்டு விடாதீர்கள்…
முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்…. அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்….. செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள். நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ…
கண்ணீர்.! ஓர் வரம்! கண் அழுக்கை துடைக்கும் தெளிவான பார்வை கொடுக்கும் மன வலியை குறைக்கும். கண்ணீருக்கும் அதை கொடுத்தவர்க்கும் நன்றிகள் பல சொல்வோம்….
நம் சிரிப்பு பிறருக்கு சந்தோசத்தை தரலாம்…. ஆனால் நம் கண்ணீர் யாருக்கும் சந்தோசத்தை தரவே கூடாது!
இணையத்தின் வளர்ச்சியால்… அயல்நாடுகளெல்லாம் அண்டை வீடு போல் ஆகிவிட்டது… ஆனால், அண்டை வீடுகளெல்லாம் அயல்நாடுகள் போல் ஆகிவிட்டது.
நம்மை நேசிக்கும் நூறு பேரை நேசிக்கத் துவங்கினாலே… நம்மை வெறுக்கும் நான்கு பேரைப்பற்றி யோசிக்க நேரமிருக்காது.
சிரித்துக் கொள்கிறான் ஆண்டவன்… எத்தனை கோழிகள் எத்தனை ஆடுகள் எத்தனை மாடுகள் எத்தனை மீன்கள் எண்ணிக்கையில் தினம் தினம் எத்தனை எத்தனை கோடிகள் ஊண் என்று நாம் கொன்று குவிக்கும் ஊன்கள் அரக்கன் என்றோ…
“விழுந்து விடுவோமோ” என்ற அச்சத்தை விடுத்து, “விழுந்தாலும் எழுந்துவிடுவேன்” என்ற நம்பிக்கையுடன் ஓடினால்… தடுமாற்றமே இல்லை.
ஆயிரம் வேலைகள் இருப்பினும், சற்று நேரம் வேலைகளை ஒதுக்கிவிட்டு, “நலம் நலமா …. ” என்று உறவுகளிடம் அடிக்கடி நலம் விசாரியுங்கள், அடிக்கடி உறவாடுங்கள்…. இருக்கும் போது உணராத மனம், இல்லாத போது வருத்தப்படும்…
“நேரம்” இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது, உங்களால் அதை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதைச் செலவிட முடியும்.
புறக்கணிக்க வேண்டியது கோபங்களைத் தானே தவிர.. கோபத்தை உரிமையோடு காட்டிய அன்பானவர்களை அல்ல.!
வாழ்வு பொய்யாவதே இல்லை, விதிக்கப்பட்ட வழியில் அது போய்க்கொண்டே இருக்கிறது, வாழ்வைப்பற்றிய கனவுகள்தான் பொய்த்துப்போகின்றன. வாழ்க்கையும் கடினம் இல்லை, வாழ்வதும் கடினம் இல்லை, நம்மைச் சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.…
சிந்தனை…. கடந்து போகும் வாழ்க்கையை விட….!!!!! காப்பாற்றி விட்டுப் போகும் வாழ்க்கை சிறந்தது…..!!!!! பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம்….!!!! உன்னைப்பற்றி அதிகம் பிறரிடம் ‘பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்… !!!! இரண்டுமே,உங்கள் நிம்மதிக்கு…
இந்த உலகம் மிகப்பெரிய கல்விக்கூடம் என்பதை மறுக்கயியலாது… நிஜ வாழ்க்கை முதல் இணையதள வாழ்க்கை வரை… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதர்களையும் கொண்டு நிறைய நிறையவே பாடம் போதிக்கின்றது….!