Menu Close

காலை வணக்கம்

சொல்ல முடியாத சோகங்களும்..

சொல்ல முடியாத
சோகங்களும்..
வெல்ல முடியாத
வாதங்களும்..
பேச முடியாத
வார்த்தைகளும்..
மறக்க முடியாத
நினைவுகளும்
கொண்டது தான்..
மனித வாழ்வு!

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்._

சிந்தனைச் சிதறல்
மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்._
வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.
மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.
கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை.

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான் சோதனை.

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான்
சோதனை.
நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார்.
உண்மையை பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.

கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தான்
ஒருவர் மீது ஒருவர் பரிவுடன் இருப்போம் .
ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்.
கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.
“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்”
இல்லாதவர்களுக்கு செய்வது இறைவனுக்கு செய்வதற்குச் சமம்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்வோம்.
உதவி செய்ய முடியாவிட்டாலும்
நல்வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வோம்.
அவர்களோடு சேர்ந்து நமது வாழ்க்கையும் நிச்சயம் வளமாகும்.
இறை அருளால் அனைவரின் இல்லங்களிலும் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருகட்டும்.
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறட்டும்.
நல்லதே நடக்கட்டும்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல்
நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட.
யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள். எதையும் கவனத்துடன் கையாளுங்கள்.

உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சுலபமாகவும் சில நேரங்களில் கடினமாகவும் இருக்கலாம்.
அனைத்தையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள்.
இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார்.
உங்கள் எண்ணங்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
எண்ணும் எண்ணங்கள் நல்லதாக இருந்தால்
நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளமே
இறைவன் வாழும் கோயில் ஆகும்.
உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.
நம் விதி மிகவும் வலிமையானது.
இறைவன் அதைவிட வலிமையானவர்.
இறைவனை நம்பி உங்கள் பயணத்தை தொடருங்கள்.
என்றும் நல்லதையே எண்ணுங்கள்.
உங்களது இன்றைய எண்ணங்கள்
நாளை உங்கள் வாழ்வாக மாறும்.
நல்லதை நினைப்போம் .
நல்லதே நடக்கும்.

டல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு.
கடல்நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.
இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.
அதுபோலவே இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார். அனுதினமும் மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை. அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள் உங்கள் வேண்டுதல் வீண்போகாது.

மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .

நம் வாழ்க்கைப் பயணத்தில் அனைவரது நோக்கமும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
ஆனால் சிலர் மகிழ்ச்சியை வெளியே தேடுவதினால் அதை கடைசி வரை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .
அது வெளியில் தேடிக் கிடைப்பதில்லை.
இது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
அது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
என்று ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு இருக்காமல்…
வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர முயற்சி செய்யுங்கள்.
மகிழ்ச்சியான இதயங்களில் தான் இறைவன் குடி கொண்டுள்ளார்.
உங்களுக்குள் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியை மட்டும் தான் உள்ளே அனுமதிப்பீர்கள்.
துன்பங்களை தேடித்தேடி கவலைப்படாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.

இந்த பிரபஞ்சத்தில் காரணம் இன்றி எதுவும் நிகழ்வதில்லை.
தினமும் நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.
கண்டிப்பாக அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது.
உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே.
இறை பேராற்றலின் அருளால்
தங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்

உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வாழ்வில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சோர்ந்து விடாதீர்கள்!
உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால்
இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவி செய்வார்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களுக்கான பலன்களும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே நல்லதை செய்யுங்கள்.
அதற்கான நல்ல பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.
இவ்வுலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் மட்டுமே நமக்கு நிலையானது.
முடிந்தவரை புண்ணியங்களை செய்து
இறைவன் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
அதைவிட பெரிய பலன் எதுவும் இல்லை.
இறைவனின் அருளும் அன்பும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

நிச்சயம் நல்லதே நடக்கும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது.
அந்த சக்தி நம் வாழ்வையும் சிறப்பாக வழி நடத்தும்.
இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்.
நிச்சயம் நல்லதே நடக்கும்.
இறை பேராற்றலின் அருளால் தங்கள் இல்லத்தில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் 💐
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்

சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது புரிவதில்லை.
அது இல்லாத நேரங்களில் தான் உணர முடியும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்.
இல்லாததை நினைத்து ஏங்காமல், குறைகளை மட்டும் காணாமல்
அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.
நம்மைச் சுற்றி எத்தனையோ நபர்கள் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒன்றை பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
நன்றி உணர்வோடு வாழும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சொர்க்கமாகும்.
இறை அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்.

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது.

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது.
சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும்
உங்கள் மனதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்
அதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த நாள் அற்புதமான நாள் ஆகட்டும்

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல்
‘நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட.
யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள். எதையும் கவனத்துடன் கையாளுங்கள்.

Powered by J B Soft System, Chennai.